சென்னை: மகளிர் உரிமை திட்ட பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார். இது உங்களுக்கான உதவித்தொகை அல்ல, உரிமைத் தொகை, உங்களில் ஒருவனான ஸ்டாலின் வழங்கும் உழைப்புத்தொகை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு பயனாளிக்கும் தனித்தனியாக முதலமைச்சரின் கடிதம் ஸ்பீட் போஸ்ட்டில் அனுப்பப்பட்டுள்ளது.