சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கான முகாமை ஜூலை 24ல் தருமபுரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மகளிர் முன்னேற்றத்தில் பெரும் பாய்ச்சலாக அமையவுள்ள மகளிர் உரிமைத் திட்டத்தைச் சுற்றியே என் எண்ணங்கள் உள்ளன. தகுதி வாய்ந்த மகளிர் ஒருவர் கூட விடுபடாமல் இந்தத் திட்டம் போய்ச் சேர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது.