பெங்களூரு: எனக்கு வயதாகி விட்டதால் வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் திட்டம் இல்லை என்று முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடா தெரிவித்தார். இது குறித்து பெங்களூருவில் உள்ள மஜத தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘நான் எனது வாழ்நாளில் முக்கால் பகுதியை பொது வாழ்க்கைக்கு அர்பணித்துள்ளேன். தற்போது 91 வயதாகிறது.
மாநிலங்களவை உறுப்பினராக இன்னும் இரண்டரை ஆண்டுகள் பதவி உள்ளது. வயதாகிவிட்டதால் வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. அதே சமயத்தில் எனது மகன் குமாரசாமி தேர்தலில் போட்டியிடுவது குறித்து பிரதமர் மோடி தீர்மானிப்பார் ’ என்றார்.