புதுடெல்லி: டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலிடமும் விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. இதுவரை 3 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்நிலையில், 4வது முறையாக வரும் 18ம் தேதி நேரில் ஆஜராக கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை நேற்று சம்மன் அனுப்பி உள்ளது.
வரும் 18ல் ஆஜராக கெஜ்ரிவாலுக்கு ஈ.டி. 4வது முறையாக சம்மன்
previous post