புதுடெல்லி: மாநிலங்களவையில் இருந்து முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்பட மொத்தம் 68 எம்பிக்கள் ஓய்வு பெற உள்ளனர். அவர்களுக்கு பிரியாவிடை அளிக்கும் வகையில் பிரதமர் மோடி நேற்று மாநிலங்களவையில் பேசினார். அவர் பேசுகையில், ‘ முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மாநிலங்களவைக்கு சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தார். அவரது செயலானது ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் இருந்தது. அவர் இந்த சபைக்கு பெரும் பங்களிப்பைச் செய்துள்ளார்’ என்றார்.