சென்னை: அரசியல் உள்நோக்கத்தோடு கருத்துகளை திரித்து பேசுவது மோடியின் கைவந்த கலை என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். காங். உடனான உறவை முறிக்க திமுக தயாரா என முதல்வர் ஸ்டாலினுக்கு மோடி சவால் விடுத்திருக்கிறார். தென்னிந்தியர்கள் குறித்த கருத்தை விமர்சிக்கும் மோடி நிற பாகுபாடு அரசியலுக்கு தூபம் போடுகிறார். வகுப்புவாத, நச்சு கருத்துகளை பரப்பி மக்களை பிளவுபடுத்த மோடி முயற்சிக்கிறார் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.