கொல்கத்தா: மேற்குவங்க உள்ளாட்சித் தேர்தலில் கூச்பெகார் ஃபாலிமாரி வாக்குச்சாவடியில் பாஜக முகவர் குண்டு வீசி கொலை செய்யப்பட்டார். ஃபாலிமாரி வாக்குச்சாவடியில் பாஜக முகவர் மாதவ் விஷ்வாஸ் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாஜக முகவர் கொலை செய்யப்பட்டதை அடுத்து ஃபாலிமாரி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.