சென்னை: சென்னையில் வேளாண் வணிக திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கண்காட்சி அரங்கை திறந்து வைத்தார். வேளாண் வணிக திருவிழாவை தொடங்கி வைத்து கண்காட்சியை முதல்வர் பார்வையிட்டார். தமிழ்நாடு முழுவதும் இருந்து விவசாயிகள் பங்கேற்றிருந்தனர். உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், ஏற்றுமதியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு விருதுகளையும் முதலமைச்சர் வழங்குகிறார்.