கூடுவாஞ்சேரி: வண்டலூர் அருகே கொளப்பாக்கத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா வண்டலூர் அடுத்த கொளப்பாக்கத்தில் நேற்றுமுன்தினம் இரவு நடந்தது. இதில் வடக்கு ஒன்றியச் செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான கஜா (எ) கஜேந்திரன் தலைமை தாங்கினார்.
இதில் ஒன்றியச் செயலாளர்கள் சம்பத்குமார், குணசேகரன், நகரச் செயலாளர்கள் சீனிவாசன், ரவிக்குமார், செந்தில்குமார், மறைமலைநகர் நகரமன்ற முன்னாள் தலைவர் கோபிகண்ணன், மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவி, மாவட்ட பிரதிநிதிகள் ஹரிகிருஷ்ணன், சாந்தி புருஷோத்தமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஒன்றிய இளைஞரணி செயலாளர் கனி (எ) கணேஷ் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மாபா.பாண்டியராஜன், டி.கே.எம்.சின்னையா,
முன்னாள் எம்பி சிட்லபாக்கம் ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ கனிதாசம்பத், நடிகை பபிதா ஆகியோர் கலந்துகொண்டு மாற்று திறனாளிகளுக்கு காற்றடிக்கும் சிலிண்டர், மூன்று சக்கர சைக்கிள், பெண்களுக்கு தையல் இயந்திரம் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வேட்டி, சேலை வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் வேங்கடமங்கலம் கல்யாணி ரவி, நல்லம்பாக்கம் லட்சுமணன், கொளப்பாக்கம் வார்டு கவுன்சிலர் பாலாஜி உட்பட 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ரங்கன் நன்றி கூறினார்.