தனுசு, மீனம், மிதுனம் மற்றும் கன்னி ராசிக்காரர்கள்: திங்கள் கிழமை அன்று கபாலீஸ்வரரை வழிபாடு செய்தால் சில பிரச்னைகளில் சுமூக தீர்வும் தன வரவிற்கான வழியும் உண்டாகும்.
மகரம், மேஷம், கடகம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள்: செவ்வாய்க் கிழமை அன்று சிவசுப்ரமணியரை புதன் ஹோரையிலும் புதன் கிழமை அன்று அதே சிவசுப்ரமணியரை சுக்ர ஹோரையில் வழிபாடு செய்தால் சுப பலன்கள் ஏற்பட்டு தன வரவிற்கான திட்டங்கள் உருவாகும்.
கும்பம், ரிஷபம், சிம்மம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள்: வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பத்மாவதி தாயாரை பூக்கள் மற்றும் துளசியுடன் வழிபாடு செய்தால் நற்பலன்கள் உண்டாகும். மேலும், பூக்கள் பெயர் கொண்ட திரைப்படங்கள் பார்த்தாலும் புதுத்திட்டங்கள் கைகூடும்.