சென்னை: தேர்தல் புகார்கள் குறித்து மாநில தேர்தல் அதிகாரியே நடவடிக்கை எடுக்கும் வகையில் அதிகாரத்தை பகிர்ந்தளிக்க வேண்டும் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். சென்னையில் தலைமை தேர்தல் ஆணையருடன் ஆலோசனை நடைபெற்றது. திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். வி.வி.பாட் முறையில் செய்த மாற்றம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறதுஎனவும் அவர் கூறினார்.