மதுரை: விருதுநகர் கலசலிங்கம் பல்கலைக்கழக கல்லூரிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கலசலிங்கம் கல்லூரி மீது உயர்நீதிமன்ற மதுரை கிளை கடும் குற்றம்சாட்டியுள்ளது. எந்த அனுமதியும் இல்லாமல் கல்லூரி நிர்வாகம் ஆசிரியர் பயிற்சி என மாணவர்கள் சேர்க்கை நடத்தியுள்ளது.