ஏற்காடு : ஏற்காடு பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஏற்காடு விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து நலம் விசாரித்தபின்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில், “சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வாகனங்களை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரளா சென்றிருந்தேன். அதிக நேரம் நிற்பதால் குதிகாலில் வலி ஏற்பட்டது ,”என்று கூறினார்.