Saturday, June 14, 2025
Home செய்திகள்இந்தியா சித்தூர் மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

சித்தூர் மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

by Lakshmipathi

*அதிகாரிகளுக்கு இணை கலெக்டர் உத்தரவு

சித்தூர் : சித்தூர் மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு இணை கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். சித்தூர் மாவட்டத்தில் அதிக அளவு மணல் கடத்தப்பட்டு, வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்து வருவதாக கலெக்டர் அலுவலகத்திற்கு புகார்கள் வந்தன. இதனை அடுத்து மாவட்ட இணை கலெக்டர் சீனிவாசலு அதிகாரிகளுடன் சென்று மணல் அடைப்புகளை ஆய்வு செய்தார். இதுகுறித்து மாவட்ட இணை கலெக்டர் பி.சீனிவாசலு கூறியதாவது:

மாவட்டத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற மணல் அள்ளுவதற்கான அனுமதி காலாவதியாகிவிட்டது. பாதாளச் சுரங்கத் துறை மாவட்ட பஞ்சாயத்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுப், கலால், நிலத்தடி நீர், பாசனம், போக்குவரத்துத் துறை அதிகாரிகள், சித்தூர் ஆர்டிஓ ஆகியோர் தலைமையில் சித்தூர் ரூரல் மண்டலம், கங்காதர நெல்லூர், கார்வேட்டி நகரம் மற்றும் நகரி மண்டலங்களில் உள்ள மணல் அடைப்புகளை ஆய்வு செய்தோம்.

மாவட்ட அரசால் அடையாளம் காணப்பட்ட 14 மணல் அடைப்புகளை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் நேற்று ஆய்வு செய்தோம். மாவட்டத்தில் மணல் ரீச் கமிட்டிக்கு மாவட்ட ஆட்சியர் தலைவராகவும், இணை ஆட்சியர், நிலத்தடி சுரங்கத் துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், டிபிஓ, ஆர்டிஓ, நிலத்தடி நீர் மற்றும் எஸ்இபி உறுப்பினர்களாகவும் இருப்பார்கள்.
கடந்த காலங்களில் மாவட்டம் முழுவதும் 14 மணல் அடைப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு விட்டதாகவும், அதில் 14 மணல் அடைப்புகள் காலாவதியாகிவிட்டது.

சித்தூர் ரூரல் மண்டலம், அனந்தபுரம் பி.ஏன் .ஆர். பேட்டை, ஆனகல்லு, முடூகூர், ஜி.டி.நெல்லூர் மண்டலம், கொட்ர கோணா, முக்களத்தூர், நந்தனூர், காளிஜிவேடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மணல் அடைப்புகளை, தகவல் தொடர்புத் துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்யப்பட்டது. சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகள் மற்றும் வளைவுகளில் எங்கும் சட்டவிரோத மணல் கடத்தல் நடைபெறக்கூடாது.

மணல் கடத்தல் எங்கு நடந்தாலும் பொதுமக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் இணை எஸ்.பி மற்றும் துணைப் பொறுப்பாளர் சுப்புராஜு, நிலத்தடி சுரங்கத் துறை டி.டி. கயல் ஒய்.பிரசாத், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய ஏஇஇ மதன்மோகன், டிபிஓ லட்சுமி, சித்தூர் ஆர்டிஓ சின்னையா, நிலத்தடி சுரங்கத் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi