விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தை சேர்ந்த இரு சமூகத்தினரும் நாளை மறுநாள் விசாரணைக்கு ஆஜராக ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார். நாளை மறுநாள் காலை 10 மணிக்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இரு சமூகத்தினரும் ஆஜராக ஆட்சியர் உத்தவிட்டுள்ளார். இரு சமூகத்தினர் இடையேயான பிரச்சனையை அடுத்து திரவுபதி அம்மன் கோயில் சீல் வைக்கப்பட்டது.