Sunday, May 19, 2024
Home » ஜூலை 1ம் தேதி முதல் புதுவையில் இருந்து பெங்களூரு ஐதராபாத்துக்கு மீண்டும் விமான சேவை

ஜூலை 1ம் தேதி முதல் புதுவையில் இருந்து பெங்களூரு ஐதராபாத்துக்கு மீண்டும் விமான சேவை

by Suresh

புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, ஐதராபாத் இடையே ஜூலை 1ம் தேதி முதல் மீண்டும் விமான சேவை துவங்கப்பட உள்ளது. புதுச்சேரியில் இருந்து ஐதராபாத், பெங்களூரு நகரங்களுக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தினசரி விமான சேவையை வழங்கி வந்தது. இந்தாண்டு மார்ச் மாதம் முதல் தற்காலிகமாக விமான சேவை நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதற்கிடையே புதுச்சேரியில் இருந்து விமான சேவையை துவங்க, புதுச்சேரி அரசு பல்வேறு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தது. இண்டிகோ- ஏர் நிறுவனம் புதுச்சேரியில் இருந்து ஐதராபாத், பெங்களூருவுக்கு விமானங்களை இயக்க முன் வந்துள்ளது. ஜூலை 1ம் தேதி முதல் இந்த இரு நகரங்களுக்கு மீண்டும் விமானங்கள் இயக்கப்படவுள்ளது. இதன் ஒரு பகுதியாக இண்டிகோ நிறுவனத்தின் பிரதிநிதிகள் விமான நிலையத்தில் ஆய்வு நடத்தினர். விமான நிலையத்தின் முனைய கட்டிடம், ஓடு பாதை மற்றும் கட்டுப்பாட்டு கோபுரம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். கடந்த சில தினங்களுக்கு முன் இண்டிகோ நிறுவனத்தின் மூத்த மேலாளர் ராம் பாபு மஹதே தலைமையிலான மற்றொரு குழுவானது, விமானங்களை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளை மீண்டும் ஆய்வு செய்துள்ளது.

இது குறித்து புதுச்சேரி விமான நிலையத்தின் இயக்குநர் ராஜசேகர் ரெட்டி கூறுகையில், பயணிகள் முனைய கட்டிடம், ஓடுபாதை, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம், வானிலை ஆய்வுத்துறை அலுவலகங்கள், தீயணைப்பு, எரிபொருள் நிலையம் மற்றும் செயல்பாட்டு பகுதிகளை இந்த குழுவினர் பார்வையிட்டனர். விமானங்களை இயக்குவதற்கான வசதிகள் இருப்பது குறித்து குழு திருப்தி அடைந்துள்ளது. அதன்படி ஜூலை 1 முதல் புதுச்சேரியில் இருந்து பெங்களூரு மற்றும் ஐதராபாத் வரை சேவைகளை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

மேலும் சில வழித்தடங்களை இதில் சேர்க்க ஆபரேட்டர்கள் விரும்புகின்றனர். எந்தெந்த பகுதிக்கு என்பது விரைவில் முடிவு செய்யப்படும். துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் ஆகியோர் விமான சேவையை விரைவில் தொடங்கவும், புதுச்சேரியை அதிக இடங்களுடன் விமானத்தின் மூலம் இணைக்கவும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர், என்றார்.

You may also like

Leave a Comment

17 − 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi