சென்னை: விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடுகிறது. விக்கிரவாண்டி எம்எல்ஏ மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் தெரியப்படுத்த உள்ளது. தொகுதி காலியாக உள்ளது என்று அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 6 மாத காலத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் நிலையில், அதனுடன் சேர்த்து விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலும் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.