டெல்லி: விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் விழித்திருக்கும் நிலையை அறிய அதனுடன் தொடர்பை ஏற்படுத்த தொடர் முயற்சிகள் நடப்பதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. நிலவின் தென்துருவத்தில் இரவு துவங்கியதால் லேண்டர் மற்றும் ரோவர் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இயக்கமற்ற நிலையில் வைக்கப்பட்டிருந்த விக்ரம் லேண்டரையும், பிரக்ஞான் ரோவரை இயக்கும் முயற்சிகள் தொடருகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.