சென்னை: திருமண மோசடி புகாரை விஜயலட்சுமி திரும்பப் பெற்றதால் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் மனு அளித்துள்ளார். சீமான் மீது புகார் அளித்திருந்த நடிகை விஜயலட்சுமியை இன்று ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. வழக்கை விசாரித்துவரும் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் இன்று விடுப்பு என்பதால் அடுத்தவாரத்துக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.