விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன், சிவகாசியில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: மக்கள் உங்களை பார்த்து பேசுவது எனக்கு கிடைத்த பாக்கியம். மக்களை தங்க தட்டில் வைத்து தாலாட்ட வேண்டும் என என் தந்தை எப்பொழுதுமே சொல்வார். என் தந்தை மறைந்த பின்னர்தான் அவர் மக்களுக்காக செய்த எவ்வளவோ நல்ல விஷயங்கள் மக்களுக்கு புரிந்தது. நிச்சயமாக எனது தந்தையின் ஆசை, கொள்கைகளை என் மூலமாக மக்களுக்காக உழைக்க தயாராக உள்ளேன்.
2024 நாடாளுமன்ற தேர்தல் ஒரு துவக்கம் மட்டுமே. 2026 சட்டமன்ற தேர்தல்தான் நம் இலக்காக உள்ளது’’ என்றார். அப்போது அந்த பகுதி மக்கள், ‘‘எங்களுக்கு பட்டா கிடைக்கவில்லை’’ என கூறினர். அதற்கு பதில் அளித்து பேசிய விஜயபிரபாகரன், ‘‘நான் வெற்றி பெற்று வந்தவுடன் இந்த பகுதி மக்களுக்கு பட்டா வழங்க முயற்சி எடுப்பேன். துளசி கூட வாசம் மாறும், தவசி புள்ள வார்த்தை மாறாது’’ என தனது தந்தையின் பஞ்ச் டயலாக்கும் விட்டார்.