பிரசாரத்தில் கூட்டத்தை காட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆட்கள் அழைத்து வரப்பட்டனர். இதற்காக அந்தந்த பகுதியில் உள்ள நிர்வாகிகள் வாகன வாடகை, சாப்பாடு செலவு மற்றும் ஒரு நபருக்கு ரூ.300 என நிர்ணயம் செய்து வழங்கி உள்ளதாக தெரிகிறது. ஊட்டி ஒன்றிய செயலாளர் பெள்ளி என்பவர், தான் அழைத்து வந்த தொண்டர்களுக்கு கூட்டம் முடிந்த பின் ஏடிசி., பகுதியில் உள்ள டேக்சி ஸ்டாண்டில் வைத்து பணம் பட்டுவாடா செய்து கொண்டு இருந்தார். அப்போது தொண்டர்கள் சிலர் பணம் போதவில்லை எனக் கூறி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.