விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் போட்டியிடுகிறார். விருதுநகர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் வேட்பாளருடன் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வாக்கு சேகரித்தார். அப்போது, திடீரென ஒரு தேநீர் கடைக்குள் ராஜேந்திரபாலாஜி புகுந்தார். பின்பு, எப்படி டீ போடுவது என டீ மாஸ்டரிடம் கேட்டபடியே ஒரு கண்ணாடி குவளையில் வேட்பாளர் விஜயபிரபாகரனுக்கு டீ போட்டு வழங்கினார்.
மீதமிருந்த தேநீரை அவரும் ஒரு டம்ளரில் ஊற்றி குடித்தார். இதை பார்த்த தேமுதிக தொண்டர்கள், பரப்புரையின்போது வழக்கமாக வேட்பாளர் தான் டீ போடுவது, தோசை சுடுவது, புரோட்டா போடுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். ஆனால், வேட்பாளருடன் வந்த முன்னாள் அமைச்சரே டீ போடுகிறார், வேட்பாளர் விஜயபிரபாகரன் வேடிக்கை பார்க்கிறாரே என்று பேசிக்கொண்டனர்.