சென்னை: விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது; அவரின் அனைத்து உடல் செயல்பாடுகள் நிலையாக உள்ளது என சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த 18ம் தேதி இரவு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார்.
விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றுள்ளார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என தேமுதிக தலைமை கழகம் மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது; அவரின் அனைத்து உடல் செயல்பாடுகள் நிலையாக உள்ளது என தனியார் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, விஜயகாந்த் காய்ச்சல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் 18 நவம்பர் 2023 அன்று அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு தருகிறார். அவர் உடல்நிலை சீராக உள்ளது. அனைத்து உடல் செயல்பாடுகள் நிலையாக உள்ளது. இன்னும் சில நாட்கள் கண்காணிப்புக்கு பிறகு அவர் வீடு திரும்பி தனது வழக்கமான நடவடிக்கைகளை தொடங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.