புதுடெல்லி: டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் விஜிலென்ஸ் அதிகாரி இரண்டு பேரை மே 23ம் தேதி செல்போனில் வாட்ஸ்ஆப் அழைப்பு மூலமாக அழைத்த நபர் தன்னை டெல்லி ஆளுநர் சக்சேனா என அறிமுகம் செய்துகொண்டுள்ளார். வாட்ஸ்ஆப் டிபியில் ஆளுநரின் புகைப்படமும் வைக்கப்பட்டு இருந்தது. இது குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட இரண்டு அதிகாரிகள் தங்களது மூத்த அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். ஏதாவது காரணம் கூறி பணத்தை பறிப்பது தான் மோசடிக்காரனின் நோக்கமாக இருக்கும் என்று கணித்த அதிகாரிகள் இது குறித்து சக ஊழியர்களை உஷார்படுத்தினார்கள். மேலும் சைபர் பிரிவில் இது குறித்து புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அடையாளம் தெரியாத நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் கவர்னர் போல் பேசி மோசடி செய்ய முயற்சி
previous post