சென்னை: சேலத்தில் குழந்தைகளைக் கடத்த 400 வெளிநாட்டவர்கள் வந்துள்ளதாக பரவும் காணொலி வதந்தி என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 400 பேரில் ஒருவர் பெண் குழந்தையை கடத்தியபோது பிடிபட்டார் என பரப்பப்படும் காணொலி முற்றிலும் வதந்தி. பொதுமக்கள் இதுபோன்ற காணொலிகளை நம்பி பதற்றமடைய வேண்டாம்; வதந்தியை பரப்புவது குற்றச்செயல் என்று கூறியுள்ளார்