பெங்களூரு : கர்நாடக உயர்நீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலம் நடந்த வழக்கு விசாரணையில், வீடியோ கான்ஃபரென்ஸ் செயலியை மர்ம நபர்கள் முடக்கினர். காணொலி காட்சி மூலம் தலைமை நீதிபதி பிரசன்னா வரலே, நீதிபதி கிருஷ்ணா தீட்சித் அமர்வில் அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. காணொலி காட்சி விசாரணையின்போது சில வினாடிகள் ஆபாசப் படம் ஓடியதால் நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர்.