Sunday, September 1, 2024
Home » வால்பாறையில் யை பிரிந்த பெண் குட்டி யானை மீட்பு

வால்பாறையில் யை பிரிந்த பெண் குட்டி யானை மீட்பு

by Mahaprabhu

வால்பாறை: வால்பாறையில் தாயை பிரிந்த பிறந்து 4 மாதமே ஆன பெண் குட்டி யானையை மீட்ட வனத்துறையினர் பல மணி நேர போராட்டத்துக்கு பின் மீண்டும் தாயுடன் சேர்த்தனர். வை மாவட்டம் வால்பாறை அடுத்த பன்னிமேடு எஸ்டேட் 2 டிவிஷன் பகுதியில் நேற்று காலை 7 மணிக்கு வால்பாறை- சாலக்குடி சாலையில் பிறந்து 4 மாதமே ஆன பெண் குட்டி யானை சுற்றித்திரிந்தது. அப்போது, அவ்வழியாக வந்த அரசு பஸ் மீது மோதுவதுபோல் குட்டியானை வந்தது. தைப்பார்த்த பஸ் டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தியதால் குட்டியானை உயிர்தப்பியது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் குட்டி யானைக்கு உணவு, தண்ணீர் கொடுத்து கண்காணித்தனர். இதற்கிடையே, வனத்துறையினர் டிரோன் மூலம் தாய் யானையை கண்காணித்தனர். இதில் சிறுவனம் பகுதியில் தாய் யானை மேய்ந்து கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் தலைமையில், பெண் குட்டி யானையை மினி லாரியில் ஏற்றி சிறுவனம் பகுதிக்கு கொண்டு சென்றனர். பின்னர், லாரியில் இருந்து குட்டியானையை இறக்கிய வனத்துறையினர், அதற்கு தண்ணீர், உணவு கொடுத்து, தாய் யானை இருக்கும் இடத்துக்கு அருகில் கொண்டு சென்றனர். தாய் யானையை பார்த்த உடன் குட்டியானை ஓடி சென்று மகிழ்ச்சியுடன் சேர்ந்தது.

You may also like

Leave a Comment

11 − three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi