திருவள்ளுர் : வல்லூர் அனல் மின்நிலையத்தில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு கேட் அமர்வு போராட்டம் நடைபெற்று வருகிறது. உரிமம் இல்லாமல் ஆபத்தான முறையில் அனல் மின் நிலைய அதிகாரிகள், வேலை வாங்குவதாக கபோராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறைந்த ஊதியத்தில் எந்த பதிவும் இல்லாத தொழிலாளர்களை முறையாக பதிவு செய்து நிரந்தரம் செய்ய வலியுறுத்தி வருகின்றனர்.