மதுரை: மதுரை, விளாச்சேரியை சேர்ந்தவர் பிரேம்குமார் (18). இவர் உள்ளிட்ட சிலர் நேற்று அதிகாலையில் வைகை ஆற்றில் இறங்கும் அழகரை தரிசிக்க வந்தனர். அப்போது ஏ.வி மேம்பாலத்திற்கு கீழ் உள்ள தரைப்பாலத்தில் குளித்துள்ளனர். இதில் பிரேம்குமார் நீரில் மூழ்கி உயிரிழந்தார். ஒரு சிறுவன் மாயமானார். அவனை தேடி வருகின்றனர். இந்த சிறுவனும் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதேபோல், ஏ.வி. மேம்பாலம் நீர் தேக்கத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்து கிடந்தார். இறந்த நபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. மதுரை வடக்கு மாசி வீதி நல்ல மாடன் கோவில் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுடலைமுத்து (56), கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார். இதேபோல், விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்த பாஸ்கரன் (63), மதுரை மேல வெளி வீதி ரயில் நிலைய பஸ் நிறுத்தத்தில் முதியவர் மயங்கி உயிரிழந்தார்.