தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 65 சவரன் நகைகள், ரூ.1.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. சுந்தரி என்பவர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. குழந்தைகளுடன் சுந்தரி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, லாக்கரில் இருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.