கோவை: கோவையில் நேற்று தெலங்கானா கவர்னர் தமிழிசை அளித்த பேட்டி: நமது நாட்டின் மருத்துவத்துறையில் உயர்கல்வியில் 70 ஆயிரம் இடங்கள் உள்ளன. இதில், 3 ஆயிரத்தில் இருந்து 4 ஆயிரம் இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால், கடந்த ஆண்டு 25 சதவீதம் தளர்வு கொடுக்கப்பட்டது. இந்த ஆண்டு ஜீரோ தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது.
இது அந்த காலியிடத்தை நிரப்புவதற்காக ஒரு ஆண்டுக்கு கொடுக்கப்பட்ட தளர்வு மட்டுமே. இதற்காக நீட் இல்லை என்று சொல்வது தவறான புரிதல். கோவையில் கமல் போட்டியிடுவது குறித்து கருத்து எதுவும் சொல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.