உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலம் கதிமாவில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இளைஞர்கள் சிலர் தவறாக நடந்து கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உதம் சிங் நகர் மாவட்டத்தின் ஜாங்கய்யா எல்லை கோட்வாலி பகுதியின் கீழ் வரும் கதிமாவின் லோஹியாஹெட் சாலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மூன்று இளைஞர்கள் இரு பெண்களை சாலையில் நடந்து செல்லும் போது பின்தொடர்ந்தனர். பின்னர் அந்த பெண்ணின் பின்னால் தங்கள் ஸ்கூட்டர்களை பயம்புறுத்தும் வகையில் ஒட்டினர். மேலும் அந்தப் பெண்ணை பாலியல் ரீதியாக சீண்டினர் அங்கிருந்து தப்பியோடினர். மேலும் அந்த வீடியோவை இளைஞர்களே எடுத்துள்ளனர். பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக 3 வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உத்தரகாண்ட் காவல்துறை புகார் அளித்துள்ளது. குற்றத்தில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களை அடையாளம் கண்டு காணப்பட்டனர். கவுரவ் பிஷ்ட், சாகர் தாமி மற்றும் கதிமா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அமர் ஏரி பகுதியில் வசிப்பவர்கள் என்று கூறப்படுகிறது. மூன்று இளைஞர்களும் தலைமறைவாகிவிட்டனர், இதுவரை கைது செய்யப்பட்டதாக தகவல் இல்லை. குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.