சென்னை: அரசு பேருந்துகளுக்கு சுங்கக் கட்டணம் தொடர்பாக ஒன்றிய அரசின் ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வழக்கு விசாரணையின்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. சுங்கச்சாவடியை கடக்கும் அரசு பேருந்துகளை முழுக் கட்டணம் செலுத்த நிர்பந்திப்பதாக தமிழ்நாடு அரசு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகளுக்கு சங்கக் கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கு தொடரப்பட்டது. வாதங்கள் முடிவடையாத நிலையில் வழக்கை அக்.21-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.