Friday, May 17, 2024
Home » ஒன்றிய அரசின் அறிக்கையே தெரிவித்துள்ளது 12 லட்சம் இளைஞர்களுக்கு தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு: ஆர்.பி.உதயகுமாருக்கு, அமைச்சர் சி.வி.கணேசன் பதில்

ஒன்றிய அரசின் அறிக்கையே தெரிவித்துள்ளது 12 லட்சம் இளைஞர்களுக்கு தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு: ஆர்.பி.உதயகுமாருக்கு, அமைச்சர் சி.வி.கணேசன் பதில்

by Karthik Yash

பட்ஜெட் மீதான விவாதத்தில் திருச்சி கிழக்கு இனிகோ இருதயராஜ் (திமுக) பேசியதாவது: தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகளுக்குள் 60,567 பேருக்கு அரசு வேலை. மீதமுள்ள 2.5 ஆண்டுகளில் 50,000 பேருக்கு அரசுப்பணி தரப்படும் என்ற நம்பிக்கை. இது மட்டுமல்ல, தமிழ்நாட்டில் 2021-22ல் தனியார் நிறுவனங்களில், அதாவது அமைப்பு சார்ந்த துறைகளிலே 12,84,981 பேர் வேலை பெற்றுள்ளதாகவும், அதுவே 9.4% அதிகரித்து 2022-23ல் 14,05,171 பேர் வேலை பெற்றிருப்பதாகவும் ஒன்றிய அரசினுடைய இபிஎப்ஓ பதிவுகளில் டேட்டா காண்பிக்கின்றது.

எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார்: திமுக தேர்தல் அறிக்கையில் 3 லட்சம் பேருக்கு அரசு வேலைவாய்ப்பு தருவதாக, ஆண்டுக்கு 10 லட்சம் பேர்களுக்கு, 5 ஆண்டுகளுக்கு 50 லட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாகச் சொல்லியிருக்கிறீர்கள். நீங்கள் கொடுத்திருப்பது 28,000 பேர்தான். மற்றது எல்லாம் கருணை அடிப்படையில், டிஎன்பிஎஸ்சி, சீருடைப் பணியாளர்கள் எல்லாம் சேர்த்து. ஆகவே, அந்தத் தகவல் என்பது சரியான தகவலாக இல்லை.

அமைச்சர் சி.வி. கணேசன்: தனியார் தொழில் நிறுவனங்களில் வரும் 24ம் தேதி 2 லட்சம் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குக உள்ளோம். ஒன்றிய அரசு ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், இந்தியாவில், 12 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்த மாநிலம் தமிழ்நாடு என்று தகவல் வெளியிட்டுள்ளது.

* 100 நாள் வேலை திட்டத்தில் ஊதியத்தை ரூ.300 ஆக உயர்த்த திமுக எம்எல்ஏ கோரிக்கை
நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு காஞ்சிபுரம் எழிலரசன்(திமுக) பேசியதாவது: 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.294 வரை ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என்று அமைச்சர் செல்லியிருக்கிறார். இன்னும் 6 ரூபாய் சேர்த்து ரூ.300 வழங்கிவிட்டால், 300 ரூபாய் வழங்கிவிட்டோம் என்று அந்த இலக்கை அடைந்த மாநிலமாய் தமிழகம் அமைந்துவிடும் என்பதற்காகவே நான் இந்த கோரிக்கையை வைக்கிறேன். குடிமராமத்து தொடர்பாக முதல்வர், 5 ஆயிரம் நீர்நிலைகள் கிராமப்புறங்களில் இருக்கக்கூடியதை கிராமப்புற மக்களைக் கொண்டே அங்கேயே நாங்கள் நிர்வகிப்போம், செய்து காட்டுவோம் என்று சொல்லியிருக்கிறார்.

You may also like

Leave a Comment

nine + 17 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi