ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில், ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். துணை தலைவர் மாலதி டான்போஸ்கோ வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சூர்யா, பானுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள் குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், ஒன்றிய கவுன்சிலர்கள் கோமதி கணேஷ்பாபு, பரமசிவன், மல்லிகா ரவிச்சந்திரன், தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்
previous post