சென்னை: தமிழ்நாட்டில் மட்டும் வெற்றி பெற்றால் போதாது இந்தியா முழுவதும் வெற்றி பெற வேண்டும் என்று முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 10 ஆண்டு கால மோடி என்ன வாக்குறுதி தந்தார், எந்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார் என்பதற்கு பாஜகவிடம் பதில் இல்லை. ஏழை, நடுத்தர மக்கள் அனைவரையும் பாதிப்பது விலைவாசி உயர்வும், வேலைவாய்ப்பின்மையும்தான். திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து மயிலாப்பூரில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் பிரச்சாரம் மேற்கொண்டார்.