சென்னை: ஒன்றிய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்காது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மாநில உரிமையை பறிக்கும் வகையில் தமிழக அரசுக்கு ஒன்றிய அரசு இதுபோன்ற அழுத்தத்தை தருகிறது. புதிய கல்விக் கொள்கையில் பிஎம் ஸ்ரீ பள்ளிகளை திறக்க தமிழக அரசு முன்வந்ததாக வெளியான தகவலுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்தார். அப்போது பேசிய அவர்; பிஎம் ஸ்ரீ பள்ளிகளை திறக்கும் ஒப்பந்தம் குறித்து ஆய்வு செய்ய மாநில அளவில் குழு அமைக்கப்படும். தமிழக அரசின் நிலைப்பாட்டில் என்றைக்கும் மாற்றமில்லை; புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம் என்று அமைச்சர் கூறினார்.