டெல்லி: அமலாக்கத்துறை வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகாததை அடுத்து அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் பெற்றார்.