சென்னை: சென்னை மதுரவாயலில் இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் 10ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார். மதுரவாயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவன் ஜீவா 10ம் வகுப்பு படித்து வந்தார். மதுரவாயில் பாலத்தின் கீழே இன்று காலை இரு சக்கர வாகனத்தில் வந்த போது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. தேர்வு முடிவு வெளியான நிலையில், ரிசல்ட்டை பார்க்கும் முன்பே பலியானார்.