திண்டுக்கல்: உலகம்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 20 பேர் காயமடைந்துள்ளனர். உலகம்பட்டியில் பெரிய அந்தோணியார் கோயில் திருவிழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. 16 சுற்றுகளுடன் நிறைவடைந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 762 காளைகளும் 500 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.