சென்னை: அசாமில் ராகுலின் யாத்திரையில் பாஜகவினரின் இழிவான தாக்குதல் வெட்கக் கேடானது என்று தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு தலைவர் ரஞ்சன்குமார் தெரிவித்துள்ளார். மக்களின் உரிமைகளை கடந்த 10 ஆண்டுகளாக காலில் போட்டு மிதித்துக் கொண்டிருக்கிறது பாஜக. பாஜகவினரின் மிரட்டல்களுக்கு எல்லாம் பயந்த இயக்கம் காங்கிரஸ் அல்ல என்று அவர் கூறியுள்ளார்.