கிவ்: உக்ரைன் மீது சரமாரி தாக்குதல் நடத்திய ரஷ்யாவுக்கு சொந்தமான 32 டிரோன்களை உக்ரைன் படை சுட்டு வீழ்த்தி உள்ளது. உக்ரைன், ரஷ்யா இடையிலான மோதல் ஒருவருடத்தையும் தாண்டி நடந்து வருகிறது. உக்ரைன் நகர்களை குறிவைத்து ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. போர் விமானங்கள், ஏவுகணைகள் மட்டுமின்றி இல்லாமல் தற்போது டிரோன்கள் மூலமும் தாக்குதல் அதிகரித்து உள்ளது. நேற்று அதிகாலை கிவ் நகரை குறிவைத்து ரஷ்யாவில் இருந்து ஷாஹெட் டிரோன்கள் அதிக அளவில் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த டிரோன்களை உக்ரைன் படைகள் சுட்டு வீழ்த்தின. சுமார் 32 டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் படைகள் அறிவித்தன. இதை உக்ரைன் விமானப்படை செய்தித் தொடர்பாளர் யூரி இஹ்னாட் தெரிவித்தார். மேலும் உக்ரைனின் தெற்கு ஜபோரிஜியா பகுதியையும் ரஷ்யா அணுஆயுத ஏவுகணை மூலம் தாக்கியது. இதனால் உக்ரைனில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது. கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் 15 நகரங்கள், கிராமங்களில் இந்த தாக்குதல் நடந்தது.