தேவதானப்பட்டி, ஏப். 20: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை புதுப்பட்டி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சென்றாயப்பெருமாள்(32) மற்றும் அவரது உறவினர் முருகேசன் (48) ஆகியோர் நேற்று முன்தினம் டூவீலரில் கொடைக்கானல் சென்றுள்ளனர். கொடைக்கானலில் இருந்து நேற்று டூவீலரில் கீழே இறங்கி நிலக்கோட்டைக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது தேவதானப்பட்டி காட்ரோடு அருகே வரும்போது சாலை ஓரத்தில் இருந்த பாலத்தில் டூவீலர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் டூவீலரை ஓட்டி வந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே பலியானார். சென்றாயப்பெருமாளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து புகாரின் பேரில் தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.