தேனி, ஏப். 20: கம்பத்தை சேர்ந்தவர் வாசுதேவன் மகன் பாலஸ்ரீனிவாசன் (51). இவரது டெலிகிராம் குரூப்பில் உள்ள தனியார் நிறுவனத்திடமிருந்து ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் வரை முதலீடு செய்தால் 150 நாட்களில் முதலீட்டு பணம் இரட்டிப்பாக்கி தரப்படும் என்ற மெசேஜ் வந்துள்ளது. இதனை நம்பிய பாலஸ்ரீனிவாசன் கடந்த 2022ம் ஆண்டு செப்.8ம் தேதி முதல் ரூ.24 லட்சத்து 50 ஆயிரம் வரை செலுத்தியுள்ளார். ஆனால் இந்த பணத்திற்கு லாபம் ஏதும் தராததுடன் முதலீடு பணத்துடன் நிறுவத்தினர் தலைமறைவாகி விட்டனர். இதுகுறித்து பாலஸ்ரீனிவாசன் தேனி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இப்புகாரின்பேரில், பாலஸ்ரீனிவாசனை மோசடி செய்ததாக தனியார் நிறுவனத்தை சேர்ந்த தனியரசன், லதா, பிரகாஷ், டேனியல்சந்தோஷ், பாலா என்ற பாலமுருகன், பாலாஜி மற்றும் செல்வராஜ் ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதலீட்டு பணம் 150 நாளில் இரட்டிப்பு என ரூ.24.50 லட்சம் மோசடி
previous post