தேனி, ஏப். 20: தேனி அருகே வீரபாண்டியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முத்தமிழ் விழா மற்றும் நுண்கலை விழா நடந்தது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் கவுசல்யா தலைமை வகித்தார். விழாவில் தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உதவி பேராசிரியர் மதுரை சந்திரன் பங்கேற்று சிறப்புரையாற்றினர். இதில் தமிழ் துறை தலைவர் உமாதேவி வரவேற்புரையாற்றினார். விழாவின்போது, மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மேலும் முத்தமிழ் விழா மற்றும் நுண்கலை விழாவினை முன்னிட்டு மாணவ, மாணவியருக்கு பேச்சு, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. விழாவில், கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில், பேராசிரியை வான்மதி நன்றி கூறினார்.
கல்லூரி நுண்கலை விழா
previous post