தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டில் மணல் கொள்ளையர்களுடன் தொடர்புடைய காவலர்கள் நீலகிரி மாவட்டத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முறப்பநாடு விஏஓ லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கு தொடர்பாக டிஎஸ்பி சுரேஷ் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.