திருச்சி: திருச்சி மாவட்டம் பொன்மலை ரயில்வே பணிமனையில் ரயில் எஞ்சினை திருடிய 2 பேரை போலீஸ் கைது செய்தது. ரயில் எஞ்சினை திருடிய கோபால், மணிகண்டன் ஆகியோரை பொன்மலை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். பணியின்போது கவனக்குறைவாக இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் கிரண் உட்பட மூவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.