ரயிலில் இருந்து கர்ப்பிணி தவறிவிழுந்து உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. கொல்லம் ரயிலில் இருந்து கர்ப்பிணி தவறிவிழுந்து உயிரிழந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ரயில்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், ரயில் பாதுகாப்பு அம்சங்களை ஆராயவும் உத்தரவு. கர்ப்பிணி உயிரிழப்பு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.