திருச்சி : தஞ்சாவூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் நீர் நிலைகளை தூர்வாரும் பணிகளை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி வருகை தருகிறார். அவர் திருச்சி வருவதை முன்னிட்டு அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இன்று மற்றும் நாளை முதல் அமைச்சர் செல்லும் வழிகளில் டிரோன்கள் பறக்க தடை விதித்து ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.