Sunday, May 26, 2024
Home » அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு

by MuthuKumar

விண்ணப்ப கட்டணம்
* இதர பிரிவு மாணவர்களுக்கான விண்ணப்பக் கட்டணம் ₹48, பதிவுக் கட்டணம் ₹2
* எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ஏதுமில்லை, பதிவுக்கட்டணம் ₹2

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25ம் கல்வியாண்டுக்கு இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி 12 முதல் 17ம் தேதி வரை செய்முறை தேர்வும், மார்ச் 1 முதல் 19ம் தேதி வரை எழுத்து தேர்வுகளும் நடைபெற்றன. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 7 லட்சம் மாணவ-மாணவிகள் இந்தத் தேர்வை எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவு இன்று (மே 6) வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் தங்கள் உயர்க்கல்விக்கான விண்ணப்ப பதிவை தொடங்கி விடுவர். தமிழ்நாட்டில் மொத்தம் 633 சுயநிதி தனியார் மற்றும் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்க இருப்பதாக கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25ம் ஆண்டுக்கான இளங்கலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பம் உள்ள மாணவ-மாணவிகள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் இன்று (மே.6) முதல் விண்ணப்பிக்கலாம். தாமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் டெபிட், கிரெடிட் கார்ட், நெட் பேங்க், மற்றும் யுபிஐ மூலம் இணையதளம் வாயிலாகச் செலுத்தலாம். இணையதளம் வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் கல்லூரிச் சேர்க்கை உதவி மையங்களில் “The Director, Directorate of Collegiate Education, Chennai – 15” என்ற பெயரில் அல்லது வங்கி வரைவோலை மூலமாகவோ அல்லது நேரடியாகவோ செலுத்தலாம். கூடுதல் விவரங்களை www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

You may also like

Leave a Comment

four × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi